எண்ணம் சுமந்து ,
மண்ணில் அவளும்,
பிறந்திருப்பாள் !!
கயவன் ஒருவன்,
கலைத்த கனவினில்,
கலைந்து கிடந்தாள்,
சாலையோரம்!!
கடந்து சென்றது,
கட கடவென பேருந்துகள் ,
மட மடவென மனிதர்கள் ,
வேகம் குறையாமல் !!
தீண்டிய பார்வைகள் ,
திட்டி தீர்த்தது கொஞ்சம்,
பாவம் என்றது மிச்சம் ,
பாசம் தாராமல் !!
மூடன் ஒருவன் ,
மீண்டும் தீண்ட ,
அஞ்சி நடுங்கிய கண்கள் ,
இன்றும் கண்ணில் !!
இருபது ரூபாயை ,
இறுக்க கையில் திணித்து ,
காப்பாற்று என்ற கண்கள் ,
இன்றும் நெஞ்சில் !!
போர்வை போர்த்தி,
பத்திரம் செய்து ,
வழியனுப்பிய பின்னும் ,
இன்றும் மனதில் நீ !!
என்னை போலவே ,
எண்ணம் சுமந்து ,
கனவு கோட்டை ,
நீயும் செய்து இருப்பாயே பெண்ணே !!!