Saturday, 12 October 2013

இசை உலகம்!!!


பிறப்போடு பிறக்கும் அதிசயம்!!
இறப்பிலும் பிரியா ரகசியம் !
சத்த கவிதைகளாய் ,
நித்தம் வருடும் !
பேசும் நிழல்களாய்,
பக்கம் நடைபயிலும்!
காலை நேர இரவுகளை, 
ராகம் சேர்க்கும் என்னிடம்!
இரவின் காலை பக்கங்கள்,
மெட்டுகளில் மொட்டு விடும்!
செவிகள் உணரும் நேரம்,
இதயம் மெல்ல உருகும் !
நரம்பின் மூலை முடுக்கும்,
புது மொழி ஒன்று சுமக்கும்!
என் சிரிப்பின் பின்னே,
மறைந்து இருக்கும்!
என் கண்ணீர் மறைக்க,
துணை இருக்கும்!
தனிமை சுகங்கள்
அந்த உலகில் இல்லை!
அவை  இல்லா உலகம்
எனக்கும் தேவை இல்லை!
உன்னுள்ளும் தோன்றும்,
என்னுள்ளும்  தோன்றும் ,
உனக்காகவும் பிறக்கும் ,
எனக்காகவும் பிறக்கும் ,
உலகம் சுமக்கும் ஒரு
பொது உடைமை!
எல்லைகள் கடந்த அந்த
இசை வலிமை!
இசை இல்லா விடியல்கள்
கண்டதில்லை இதுவரையில்!!
இசை இல்லா இரவுகளும்
கடந்ததில்லை இன்றுவரையில் !!
இசை இல்லா
ஓர் உலகம்?
கனவிலும் வேண்டாம்
ஒரு பொழுதும்!!!


No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!