Tuesday, 22 October 2013

பருவ மழை!!


மொத்தமாய் திருட ...
சித்தத்தை வருட....
கண்ணுக்குள் மறைய..
கன்னத்தில் கரைய..
மேகமாய் திரள..
மேனியில் உருள..
வெப்பங்கள் அடங்க...
சிலிர்ப்புகள் தொடங்க...
என் ஆடையாய் மாற...
என் வாடையில் சேர...
சின்னதாய் பிணைய...
செல்லமாய் இணைய...
மிச்சம் இல்லாமல்...
மோட்சம் கொண்டிட...
என்னிடம் வந்துவிட்டான்...
வடகிழக்கு கள்வன்!!!


No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!