Saturday, 5 October 2013

புத்தகம் என்னும் வித்தகன்!!!


மொத்த வாசனை முகர்ந்து,
 முத்த தழுவலில் ஆரம்பிக்கும்!!
பித்தம்  உச்சிவரை ஏறும்,
 முதல் பக்கம் திருப்பும்போது!!
எழுத்தின் நடுவில் புகுந்து,
 கட்டி அணைக்க தோன்றும்!!
வார்த்தை விரிப்பில் ஏறி,
 உலகை ஆள  முயலும்!!
கதையின் உள்ளே சென்று,
 காட்சி மாற்ற திணறும்!!
கனவிலும் மிதந்து வாழ,
 ஒரு புதுக்கதை விட்டுச்செல்லும்!!
வாட்டர்லூ போரின் விளிம்பில்,
 நெப்போலியன் வீரியம் அறியலாம்!!
வாதாபி கடவுளின் தந்தம்,
 தொலைந்த இடத்தையும் காணலாம்!!
காதல் ரோமியோ கண்முன்னே,
 ஜூலியட் தூக்கி செல்வானே !!
பாலை வனத்தின் பாதைகளையும், 
 அத்துபிடி ஆக்கி செல்லுமே!!
தேடி திரியும் நாட்களுக்கு,  
 பதில்கள் ஆயிரம் தந்துவிடும்!!
தனிமை தழுவும் வேளையிலும்,
 என்னை தழுவி மாயம்செய்யும் !!
அஃறினை நண்பன் அவன்!!
 தொற்றிகொள்ளும் காதலன் அவன்!!
பக்கங்கள் என்னும் சதை சுமந்து,
 புத்தக வடிவில் உலகை ஆள்பவன் !!
குட்டென்பெர்க்கின் மூளை குழந்தை,
 உலகம் சுமக்கும் பேதை குழந்தை!!
மறுஜென்மம் உண்மை என்றேன்
 ஒவ்வொறு புத்தகத்தின் முடிவிலும்!!
கோடி பிறவிகள் நிச்சயம் சாத்தியம்
 புத்தகம் பக்கம் நம் பக்கங்கள் சென்றால்!! 

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!