Wednesday, 11 December 2013

என்னவன் பாரதி!!



தாலாட்டு அறிந்தேன்
உன் கண்ணம்மாவை
என் அம்மா சொன்னதால்!!

அச்சம்  தவிர்த்தேன்
உச்சி தொட்டு
என் தந்தை உன்னை சொன்னதால்!!

தேசியம் அறிந்தேன்
உன் "எந்தையும் தாயும்"
என் சிந்தையில் நின்றதால்!!

கனவுகள் சுமந்தேன்
"வானகம் இங்கு தென்பட"
எண்ணம் நீ தந்ததால்!!

கர்வம் சுமந்தேன்
உன் "புதுமை பெண் "
எனக்கு முன்மாதிரி ஆனதால்!!


கவிதை சேர்த்தேன்
உன் வார்த்தை கைகள்
என் விரல் பிடித்ததால்!!

தலையணை  பக்கம்
உன் பக்கங்கள் சொல்லும்
சொற்கள் எனக்கு சுகமாகும்!!

வேடிக்கை மனிதரின்
வாடிக்கை உலகில்
தேடி எனக்கு மாயம் செய்தாய்!!

எனக்குள் நிறைந்த
என் ஆத்ம நண்பன் ஒருவன் !!
என்னவன் பாரதி!!


No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!