தன் பாதங்களின் பயண பதிப்புகளில்,
தன் நட்புகளின் பக்கங்கள் சேர்ப்பவன்..
ஒரு அடி நடந்திடும் வேளையில்,
ஓராயிரம் திட்டங்கள் தீட்டுவான்..
மழைத்துளி விரல்நகம் தீண்டும் சத்தத்தில் ,
இசைமொழி காணும் ரசிகன் அவன்..
புத்தகங்களின் பக்கங்களில் உயிர் காண்பவன்..
பக்கம் தவறாமல் எழுத்துகளுடன் காதல் கொள்பவன் ..
தூக்கத்தின் நடுவிலும் விழித்திருப்பான் ..
தூரத்து தோழர்களை நினைவில் சுமப்பான் ..
நம் நடுநிசி அழைப்புகளும்,
புன்னகை பதிலை பெற்றிடும் அவனிடம்..
நம் கிறுக்கல்களும் புலம்பல்களும் கூட,
கவிதை என்றே அவன் அரங்கேற்றுவான் ...
பாரதியின் பக்கம் சொன்ன தைரியங்களும்
இவன் நட்பின் உலகில் உணர்ந்திடலாம் ..
என்றும் என்றென்றும்,
அவன் அன்பின் மேகம் நம்மை சூழ
ஏக்கம் தரும் ஜீவன் அவன் - என் நண்பன்!!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!