அந்தி வேளையின் ஆகாய மேகங்களில்
என் நெஞ்சை செலுத்தி பார்க்கின்றேன்..
மேகங்களின் தேவதை என் மனதை திருடி,
உன் முகத்தை பரிசாய் அளித்தது...
என் கள்ளத்தனம் வெளிப்பட்டதால்,
பார்வை விலக்கி தேநீர் கோப்பையில் செலுத்தினேன்..
என் தேநீர் கோப்பை மஞ்சள் பொம்மை,
என்னை நோக்கி கண் அடிக்கின்றதே..
என் முகம் கூட உன் முகமாய்
காட்டி சிரிக்கின்றது என் வீட்டு கண்ணாடி...
உன் கள்ளத்தனம் செய்யும் கண்ணில் விழுந்தேனோ ?
உன் உள்ளம் உணர்த்திய அன்பில் கரைந்தேனோ ?
முதல் முறையாய் உணர்கின்றது என் சுவாசம்
ஒரு ஆணின் வாசம் என்னுள் கலப்பதை..!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!