என் மனதை சொல்லி அனுப்புகின்றேன்
உன்னை தீண்டும் மழைத்துளிகள்
என்னை உனக்கு சொல்லிடுமா?
குறுஞ்செய்தியில் குறிப்புகளாய்
உன் காதல் அழகாய் சொல்கின்றாய்..
உன் வார்த்தைகளின் மாயங்களால்
என் இறந்த காலத்தையும் வெல்கின்றாய் ..
என் நிழலும் உன் நிழலும்
கைகோர்க்கும் தருணம் என்று தருவாய் நீ ?
உன் கை விரல் என் ரேகையை
தீண்டும் நேரம் எப்பொழுது ?
என் இதயத்தை என் விழி வழியாய்
நீ காணும் நிமிடம் தந்துவிடு !!
என் தொலைதூர காதலனே!!
உன் மார்பு சூட்டில் நான் கரைய
கனவுகள் கொண்டு காத்திருக்கின்றேன் !!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!