Tuesday, 20 August 2013

அன்பு உயிர் பெறும் போது!!!


உயிர் உருக்கி பாசம் தருவான்
இரத்த நாளங்களில் தேன் சுமப்பான்
தலை சாய்க்க இடம் தருவான்
திசை காட்ட விரல் பிடிப்பான்

நான் பேசும் மொழிகள்  எல்லாம்
அவன் சொன்ன வார்த்தைகளை சுமக்கும்
இலக்கணங்கள் யாவும் சொல்லி தந்தான்
கண்ணீரின் அர்த்தத்தை மறைத்து வைத்தான்

வானம் என்று நான் சொன்னால்
வானவில்லால் பாதை அமைப்பான்
தாகம் என்று இமைகள் அசைந்தால்
அவன் ஜீவனும் முந்திவரும்

கையில் வந்த தேவதை  என்று
பொய்கள் பூசி பாசம் நெய்திடுவான்
நான் கொடுக்கும் சுடு நீரும்
சபாஷ் ரசம் ஆகும் அவனிடத்தில்

கம்பன் மீண்டும் பிறந்தாலும்
மொழிகள் புதிதாய் படைத்தாலும்
இந்த உறவின் அழகு புரியாது
இந்த அன்பின் இணைப்பும் தெரியாது
அண்ணன்களும் -தங்கைகளும் !!! 

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!