Thursday, 22 August 2013

என்னவனே...!!!


என் கன்னக்குழி நடுவினில்
 காதல் நிறைத்தாய்!!
என் வளையலின் நுனியினில்
 முத்தம் பதித்தாய்!!
என் விரல்களின் எண்ணிக்கை
 உன் விரல்களே அறியும்!!
என் காதலின் வண்ணங்கள்
 உன் கருவிழி அறியும்!!
உன் சட்டைக்கையின்  நுனியினில்
என் கட்டைவிரல் காதல்செய்யும்!!
உன் தோள்களின் கேள்விக்கு
 என் கூந்தல்நுனி கதை தரும் !!
நம் விழிகள் பேசும் வேளையினில்
 என் இதயம் உறைவதை உணர்கின்றேன்!!
நீ நகரும் ஒவ்வொரு நொடியினிலும்
 உன்னுடன் வரவே துடிக்கின்றேன்!!
தினம் தினம் உந்தன் பார்வையினாலே
 ஏக்கங்கள் கோடி  தருகின்றாய்!!
நொடிகள்  ஒன்றையும் தவற விடாமல்
 வியப்புகள் ஆயிரம் சேர்க்கின்றாய் !!
எனக்கே எனக்கானவனே....
உன்னில் என்னை சேர்த்துவிடு !!
 என் இதய துடிப்பையும் திருடிவிடு !! 

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!