Monday, 26 August 2013

கற்கண்டு கண்ணீர் காலங்கள் !!!

கனவுகள் தந்திடும் சுகங்களிலே
மெல்ல பிறந்திடும் விழி நீரே!!
என் திசைகளில் எங்கும் நீ இருந்தால்
ஆனந்தம் ஆகிடும் என் ஆயுளே !!

கதைகளை செவிகளில் சேர்த்தப்பின்னே,
தேவதை உறங்கும் அழகினிலே,
தாயின் தாளக்  கொட்டாவி
சிந்தும் கண்ணீர் ராகங்களை!!

பட்டுப் புடவை மடிப்புகளை,
மெல்ல மெல்ல சரிசெய்து,
தந்தை முகம் பார்க்கையில்,
விழி வழி பதிலாய் துளி வந்து சேரும்!!!

தயங்கி தயங்கி விழி பார்த்து,
தயக்கம் மறந்து இதழ் சேர்க்கும்,
முதல் முத்தத்தின் முடிவில் ,
முகம்சேரும் அழகிய கண்ணீர் துளி !!

வலிகள் தீர்க்கும் விரல்களின் நடுவில்,
தாடை பதித்து இதழ்கள் விரித்து ,
புருவம் சுருக்கி சுவாசம் நீளும்,
நொடிகளின் முடிவிலும் சிறு துளி வரும்!!

சுகங்களின் சுமைகள் நீளும் வேளையில்,
நெஞ்சின் முடிப்புகள் துடிக்கும் ஓசையில்,
சின்ன சின்னதாய் கண்களில் சிலிர்க்கும்,
மனிதம் விரும்பும் ஆனந்த கண்ணீர் !!

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!