Sunday, 1 September 2013

நீ இல்லா என் நிமிடங்கள்!!!

என்னுள் புகுந்து என்னை இழுக்கும்
 பார்வையின்  தீண்டல் தொலைவிலே !!
கன்னம் சிவக்க காதல் பேசும்
 இதழ்களின் அசைவு கனவினிலே !!
என் நாசி கடக்கும் தென்றல்
 உன் பெயர் மட்டும் சுமக்கின்றதே!!
தினம் தினம் கடக்கும் சாலைகளும்
 என்னை தனியாய் தாங்க மறுக்கின்றது !!
ஒரு விழி மட்டும் மைதீட்டி
 மறு விழி மறந்து  நடக்கின்றேன் !!
என் துப்பட்டாவின் ஓரம் எல்லாம்
 உன் வியர்வை துளியை கேட்கின்றது !!
என் இரவுகள் எல்லாம் நீயின்றி
 உன் கதைகள் சுமக்க ஏங்குதடா !!
நான் கேட்கும் இசை எல்லாம்
 உன் குரலாய் மாறி கொல்லுதடா !!
உன் ஓரப்பார்வையின் மொழி படிக்க
 ஒவ்வாரு நொடியிலும் ஏங்குகின்றேன்!!
கண்ணீர் வார்த்தையை கற்று தந்திட
 இத்தனை தூரம் சென்றாயோ!!
என் பிறவியின் முடிவே !!!
நீ இல்லா என் நிமிடங்களை
 களவாடி செல்ல வந்துவிடு !!
என் விழியின் ஓரம் வழியும் நீரை
 உன் இதழில் சீக்கிரம் சுமந்துவிடு !!

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!