உன் விழி பார்த்த காரணத்தால்,
நிலவு வெட்கி உள் சென்றது...
உன் இதழ் சிந்திய சிரிப்பில்,
கவியும் வார்த்தைகள் கோர்ப்பதை மறந்தான் ...
உன் கால் சுவடை தீண்ட,
கடல் அலையும் போட்டி போடுகின்றது...
உன் கூந்தல் வருடிச் செல்ல,
தென்றல் காற்றும் தவம் கொள்கின்றது..
ஐயோ !!
அந்த நெற்றி முடியின் ஓரத்தில் ,
என் குட்டி இதயம் தவிக்கின்றதே ...
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!