Friday, 12 April 2013

காதல் நேரம்!!!


விழியின்  ஓரம்  வழிந்து  ஓடும் மையினை
 உன் விரல் மெல்ல  தீண்டியே  முத்தம் சேர்க்கும் ...
எந்தன் நெற்றி குங்குமம் உன் நெற்றி  சேர்ந்திடும்
 அந்த இன்ப நொடி நாடியை உறைய வைக்கும் ...
புரியாமலே புதிராகவே உன் கைவிரல்  என் கையுடன்...
 என் ரேகையும் உன் பக்கமே தினம் நீள்கின்றதே...
அறியாமலே விழி பேசுமே ஓராயிரம் அர்த்தங்களை
 வெட்கங்களின் பரிமாற்றமும் அரங்கேறிடும் மெதுவாகவே ...
நம்  காதலை நாம் சொல்லிட பாஷைகளே தேவையில்லை
உன் விழியின் வார்த்தைகளை  நான்  அறிவேன் ..
என்  வெட்கங்களின்  பதிலையும்  நீ மட்டுமே  அறிவாய் ..!!!


No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!