கலங்காது இருந்திடு என் மனமே!
கரையாது இருந்திடு என் குணமே!
போற்றுவார் போற்றலில் மயங்காதே !
தூற்றுவார் தூற்றலை ஏற்காதே !
உன் பாதையில் நீ நடந்திடு !
உன் பயணத்தை இன்றே தொடங்கிவிடு !
பாதையில் முட்களை நீ கண்டால்
உன் முயற்சியை சற்றே முடுக்கி விடு !
பயணத்தில் கற்கள் விழுந்து விட்டால்
உன் கனவினை கூர்மை செய்துவிடு !
தடைகள் இல்லா தடயம் ஒன்றை
உலகில் விட்டு விட்டு செல்லாதே !
துயரம் காணாத வெற்றியை என்றும்
உன் சந்ததிக்கு சரித்திரம் சொல்லாதே !
பிறப்பினை கொண்டாடும் சரித்திரம் செய்யாதே !
இறப்பினை கொண்டாடும் விசித்திரம் செய்யாதே!
உன் வாழ்க்கையை கொண்டாட
பக்கங்கள் செய்து மண்ணுக்கு பரிசளித்திடு!!!
கரையாது இருந்திடு என் குணமே!
போற்றுவார் போற்றலில் மயங்காதே !
தூற்றுவார் தூற்றலை ஏற்காதே !
உன் பாதையில் நீ நடந்திடு !
உன் பயணத்தை இன்றே தொடங்கிவிடு !
பாதையில் முட்களை நீ கண்டால்
உன் முயற்சியை சற்றே முடுக்கி விடு !
பயணத்தில் கற்கள் விழுந்து விட்டால்
உன் கனவினை கூர்மை செய்துவிடு !
தடைகள் இல்லா தடயம் ஒன்றை
உலகில் விட்டு விட்டு செல்லாதே !
துயரம் காணாத வெற்றியை என்றும்
உன் சந்ததிக்கு சரித்திரம் சொல்லாதே !
பிறப்பினை கொண்டாடும் சரித்திரம் செய்யாதே !
இறப்பினை கொண்டாடும் விசித்திரம் செய்யாதே!
உன் வாழ்க்கையை கொண்டாட
பக்கங்கள் செய்து மண்ணுக்கு பரிசளித்திடு!!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!