Friday, 22 November 2013

வேடிக்கை மனிதர்கள்


அண்டம் கண்ட அந்நியர் !
அண்டம் தின்றே வளர்ந்திடுவார் !!
காற்று தந்த மண்டலமும்,
கரியாய் மாறி கரைசேரும்!!
அரைஜான் உறுப்பின் வாதத்திற்கு,
அத்தனை உயிரிலும் பதில்தேடும் !!
தண்ணீர் தந்த பூமிக்கே,
தாகம் சேர்த்து சென்றிடுவார்!! 
வாழ்க்கை தந்த காடுகளின்,
வாழும் வழியை விழுங்கிடுவார்!!
கண்ணில் காணும் குப்பையிலும்,
காகித வர்த்தகம் செய்திடுவார்!! 
மண்ணின் கடைசி துகளிலும்,
மாடி ஒன்று சேர்த்திடுவார்!!
கடைசி இலையின் நுனியினிலும்
கட்டம் கட்டி ஆராய்ந்திடுவார்!!
வேடிக்கை மனிதனின்,
வாடிக்கை உலகில்,
உயிர்கள் இழந்திடும் மூச்சினை!!
அஃறினை ஆண்டிடும் இந்த மூடனை!!!

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!