கண்கள் சிமிட்டி கதை சொல்லிட,
தலை கோதி அன்பை சொல்லிட ,
கன்னம் துடைத்து பாசம் செய்திட,
முத்த பதிப்பில் நாட்கள் தொடங்கிட,
கைகள் கோர்த்து காலம் கடந்திட,
பாத சுவட்டில் ஜோடி சேர்த்திட,
காது சூட்டில் ரகசியம் வளர்த்திட,
கண்ணீர் சுவையை கற்று தந்திட,
புன்னகை தேசம் உலகில் சேர்த்திட,
பூமியின் தேவை மனிதம் அறிந்திட,
அண்டம் தாண்டியும் ரசனைகள் சென்றிட,
பூமியின் அளவை சிறிதென உணர்த்திட,
ஒற்றை அணைப்பில் சொர்க்கம் உணர்த்திட,
மனிதம் பெற்ற புனிதம் "அவள் "!!!
கைகள் நடுங்கும் பாட்டியாய் ஒருத்தி!
பிறவி தந்த தாயாய் ஒருத்தி !
கன்னம் கிள்ள அக்காளாய் ஒருத்தி !
தலையை கலைக்க தங்கையாய் ஒருத்தி !
பக்கம் நடக்க தோழியாய் ஒருத்தி !
திசைகள் சொல்லிட காதலியாய் ஒருத்தி !
மனதை படித்திட மனைவியாய் ஒருத்தி !
நித்தம் நித்தம் சித்தம் சுமக்கும்
துளிகள் அனைத்திலும் பெண்மை அடக்கம்!!
கவிதை தொழிலும் முடங்கி இருக்கும்,
கலைகள் அத்தனையும் நலிந்து இருக்கும்,
இந்த காவியத் தன்மை ,
நம் மனிதத்தின் மென்மை ,
பெண்மை இல்லாமல்!!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!