என் கன்னத் தசைகள் வலி சொல்லுதே,
சிரிப்பை சிந்தி அயர்ந்ததினால்..
என் இதழின் ஓரம் விரிகின்றதே,
ஒவ்வொரு வார்த்தையின் முடிவினிலே ..
என் கைபேசியின் சிணுங்கல் சத்தம்,
விடியல் விதையை விதைக்கின்றதே...
என் தாய்மொழி கூட தடுமாறுதே,
நாவினை விட்டு வெளியேற...
என் சுவாச காற்றும் அதிசயமாய்,
ஒற்றை திசையில் நகர்கின்றதே...
என் காலைகள் இங்கு வருவதெல்லாம்,
காலங்களில் அவனை சேர்த்திடவே..
என் இரவுகள் இங்கு கடப்பதெல்லாம்,
கனவுகளில் நினைவை சுமந்திடவே...
என் நிழலும் கூட வண்ணம் சுமக்கும்,
துணையாய் ஒருவன்,
இனி தினமும் என்னுடன்!!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!