Saturday, 15 February 2014

வாடை காற்றின் வாச அம்பு !!!


அவள்  நெஞ்சோடு
சிறகு ஒன்று
சேர்ந்திருந்தது ..
அது இன்றோடு
மெல்ல விரிந்து
பறக்க துடித்தது..
காற்றோடு பேசி
காதலும் பூசி
மேகம் கடந்தது...
வாடை காற்றிலே
வந்த அம்பிலே
மோதி நின்றது...
ஒரு தேவதை மகன்
தேடலின் பதில்
அங்கு உதித்தது...
தேடி வந்தவன்
தூக்கி செல்கின்றான்
அம்போடு
அவள் அன்பு நெஞ்சையும்!!! 

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!