Saturday, 25 January 2014

என்றேனும் மாறிடுமா


தாயின் உயிரை உறைய வைத்து 
துள்ளி கொண்டு மண்ணைச் சேர்ந்தாள்  
தந்தை கையின் ஒளியின் வழியே 
மெல்ல மெல்ல தவழக் கற்றாள் 
கையை பிடித்து கதைகள் சொல்ல 
மழலை மொழியில் மயக்கம் செய்தாள் 
நெஞ்சம் எங்கும் வஞ்சம் இன்றி 
கொஞ்சி கொஞ்சி பெண்மை சொல்வாள் 
நிறங்கள் அனைத்தையும் தாவணி நுனியில் 
பாஷைகள் நூறு பேச வைப்பாள் 
என்றும் போல் ஏனோ 
அந்த நாளும் இல்லை  
வழக்கம் போல நிலவும் உனக்காக 
காத்து காத்து களைத்து போனது 
காமுகன் கையில் 
ஒரு தேவதை கதை 
முடியும் விதியை 
கனவும் கூட சொல்லவில்லை 
நரகன் நகத்தின் 
நாச வலையால் 
நரகம் சென்றிடவும் துணிந்து பார்த்தாள் 
அவதாரம் பத்தும் 
அபத்தம் ஆகின ஐந்து நொடியில் 
சக்தியெல்லாம் சடலமாய் 
மண்டியிட்டது அவள் மடியின் அருகில் 
பெண்மை சொன்ன 
மண்ணின் ஈரம் 
அவள் உதிர வாசம் 
சுமந்து உறைந்தது 
அவள் கனவுகள் போனது 
அவள் இமையோடு 
அவள் நினைவுகள் சென்றிடும் 
இரண்டு ஆண்டோடு 
என்றேனும் மாறிடுமா 
எங்கோ ஒரு தேவதை 
இன்றும் சிந்தும் 
அந்த 
இரத்த துளிகளும் 
கண்ணீர் வலிகளும் 
அவல சத்தமும்???? 

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!