என் காவிய பக்கம் !!!
காலை மாலை
கடப்பதெல்லாம்
உன் காதல் வார்த்தை
கேட்பதினால்...
நித்தம் இரவை
கேட்பதெல்லாம்
உன் நினைவில் நிமிடம்
கடந்திடவே...
அலைகள் பேசும்
ரகசியங்களும்
நீ பக்கம் நின்றால்
மௌனங்களே ....
சாலைகள் தூவும்
தூசிகளும்
உன் தோளின் பக்கம்
சாமரமே...
உலகம் உடையும்
நிமிடத்திலும்
உன் கைகள் கோர்த்தால்
காவியமே...
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!