Friday, 14 March 2014

தெய்வீகம் உணர்ந்தேன் உன்னாலே!!


நாடியும் நரம்பும் போரிடும்,
மூளையும் மூச்சை நிறுத்தும்,
நெஞ்சாங்குழி சொல்லி சிலிர்க்கும்,
என் உச்சந்தலை உறையும்,
உன் மெட்டுக்கள் மெல்ல,
என்னுள் மொட்டுகள் விடும் வேளையில் ...

என் புன்னகை சத்தம்,
என் கண்ணீர் யுத்தம்,
என் கனவுகள் மொத்தம்,
உன் ராகத்திலே,
மெல்ல சேர்ந்த வெப்பத்திலே,
கொஞ்சம் கொஞ்சமாய் கொட்டி சேர்ந்திடும்...

என் நாத்திகம் நலிந்து,
கல்லறை பக்கம் சேர்ந்தது,
என் வார்த்தைகள் தீர்ந்து,
பேச்சுகள் செத்து போனது,
முதல் முறையாய்,
சித்தம் நிறைய,
இரத்தம் உறைய,
தெய்வீகம் உணர்ந்தேன் ,
உன் விரல் நாட்டியம் சிந்திய,
இசை முத்தத்திலே!!!

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!