Friday, 21 March 2014

கோடுகளுக்கு உயிர் சேர்க்க...!!!


அகரம் தீட்டி 
சித்திரம் கற்றேன் 
அதையே நகர்த்தி  
வார்த்தைகள் சேர்த்தேன் 
மொத்தமாய் கோர்த்து 
வாக்கியம் பார்த்தேன் 
காதலில் விழுந்தேன் 
வாசித்த அழகில் 
கவிதைகள் செய்தேன்  
மொழியின் வழியில் 
பார்வைகள் புதிதானது 
தமிழின் திசையில் 
தாய்முகம்  வந்தது 
தமிழ் முகம் கேட்டது 
தந்தையின் முத்தங்கள் 
தமிழ் சத்தம் கேட்டது 
தங்கையின் கொஞ்சல் 
தமிழ் கெஞ்சி நின்றது 
தோழியின் கோபம் 
தமிழ் தாபம் தேடியது 
காதலன் கரமும் 
தமிழ் வரம் கேட்டது 
சித்தம் சத்தமாய் 
யுத்தம் செய்தது 
எந்தன் பெயரை 
தமிழின் உளியில் 
சின்ன சின்னதாய் 
மெல்ல செதுக்கி 
கோடுகளுக்கும்  
உயிர் கொஞ்சம் சேர்க்க ...!!! 

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!