ரத வீதிகள்
ரகம் ரகமாய்
நம் ரகளைகள்
தினம் சொல்லும்
தெருவின் ஓரம்
தேம்பும் சாக்கடையும்
நம்மை குளிப்பாட்டிய
கதை சொல்லும்
நீலநிற உன்னில்
வெள்ளைநிற என் பெயரை
எழுதிய அழகியல்
இன்றும் அழியாமல்
முதல் முதலாக
முளைத்த பஞ்சர்
நம் பந்தத்தின் நடுவில்
தந்தது முதல் கண்ணீர்
அருவை நகர
தெரு எங்கும்
அலுப்பு சொல்லாத
நம் அரங்கேற்றம்
அன்றும் இன்றும்
என்றென்றும்
என் கால்விரல் காதல்
என் சைக்கிள் பெடலோடு !!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!