Friday, 30 May 2014

தூய்மையின் உச்சம் !!!


தூக்கம் கலைத்தேன் , 
தேகம் சிலிர்த்தேன்,
கன்னம் சிவந்தேன்,
கண்ணீர் மறந்தேன்,
புன்னகை சுமந்தேன், 
மௌனம் ரசித்தேன்,
விண்மீன் பிடித்தேன்,
நெஞ்சம் தொலைத்தேன்,
மேகம் இடித்தேன்,
மழைநீர் ருசித்தேன்,
தனிமை கடந்தேன்,
நேசம் சேர்த்தேன்,
சுற்றம் தவிர்த்தேன்,
தெய்வம் துறந்தேன், 
கவிதை கோர்த்தேன்,
காதலில் கரைந்தேன்,
என்னையும் மறந்தேன்,
தூய்மையை  உணர்ந்தேன்,
துணையாய்  என்றும்
செவியில் கொஞ்சும்
மந்திர இசையின்
போதையின் உச்சியில் !!!

No comments:

Post a Comment

Thank you buddy for your feedback...!!!