Friday, 30 May 2014

தூய்மையின் உச்சம் !!!


தூக்கம் கலைத்தேன் , 
தேகம் சிலிர்த்தேன்,
கன்னம் சிவந்தேன்,
கண்ணீர் மறந்தேன்,
புன்னகை சுமந்தேன், 
மௌனம் ரசித்தேன்,
விண்மீன் பிடித்தேன்,
நெஞ்சம் தொலைத்தேன்,
மேகம் இடித்தேன்,
மழைநீர் ருசித்தேன்,
தனிமை கடந்தேன்,
நேசம் சேர்த்தேன்,
சுற்றம் தவிர்த்தேன்,
தெய்வம் துறந்தேன், 
கவிதை கோர்த்தேன்,
காதலில் கரைந்தேன்,
என்னையும் மறந்தேன்,
தூய்மையை  உணர்ந்தேன்,
துணையாய்  என்றும்
செவியில் கொஞ்சும்
மந்திர இசையின்
போதையின் உச்சியில் !!!

Saturday, 10 May 2014

நிமிடங்கள் தொலைகிறது!!


வார்த்தை செய்யும் வித்தை,
எல்லாம் மாறி போனது!!
மௌனம் செய்யும் விந்தை,
புதியதாய் சேர்ந்து கொண்டது!!
காற்றோடு நான் பேசி,
புது பாஷை கற்றுகொண்டேன்!!
உன் நினைவில் என் நிழலை,
பார்த்து சிரித்து நின்றேன்!!
நாட்கள் நகர மறுப்பதால்,
நாட்குறிப்பை வெறுத்து விட்டேன்!!
உன் விழியில்,
நான் தொலையும்,
நேரம் வேண்டி நிற்கின்றேன்!!
உன் நினைவில்,
என் நிமிடங்கள்,
மெல்ல மெல்ல தொலைகிறது!!! 

Saturday, 3 May 2014

கால்விரல் காதல் !!!


ரத வீதிகள்
ரகம் ரகமாய்
நம் ரகளைகள்
தினம் சொல்லும்

தெருவின் ஓரம்
தேம்பும் சாக்கடையும்
நம்மை குளிப்பாட்டிய
கதை சொல்லும்

நீலநிற  உன்னில்
வெள்ளைநிற என் பெயரை
எழுதிய அழகியல்
இன்றும் அழியாமல்

முதல் முதலாக
முளைத்த பஞ்சர்
நம் பந்தத்தின் நடுவில்
தந்தது முதல் கண்ணீர்

அருவை நகர
தெரு எங்கும்
அலுப்பு சொல்லாத
நம் அரங்கேற்றம்

அன்றும் இன்றும்
என்றென்றும்
என் கால்விரல் காதல்
என் சைக்கிள் பெடலோடு !!!