என் வாழ்வின் கிழக்கு திசையினிலே
எனக்கான விடியலாய் வந்தவளே !!
என் இரத்த துளிகளின் இடையினிலே
அன்பின் சாயம் தந்தவளே !
தோழியே ! என் தோழியே !
கரைகின்றேன் உன் அன்பின் வெப்பத்திலே !
உன் இமைகளின் ஓரம் வழிந்திடும் கண்ணீர்
என் தோள்களை சேர்ந்திட காத்து நிற்கின்றேன்!!
உன் கருவிழி ஓட்டம் என் இமைகளை சேர
என் ஏக்கங்கள் சுமந்து சுவாசம் செய்கின்றேன்!
என் இதயத்தின் துடிப்பின் அர்த்தங்கள் அறிந்தவளே !
உன் பார்வையின் சுகங்களை என் வாழ்விற்கு அளிப்பாயா?
என் பிறவியின் அர்த்தம் நீ தான் பெண்ணே !
என்னையும் கவிதை செய்வாயா..?
உன் கண்கள் சிமிட்டும் இசை மொழியால்
என் பாதைக்கு வர்ணங்கள் சேர்ப்பாயா?
என் பாதங்கள் உன்னை நோக்கியே !
ஒரு முறை உன் நெஞ்சுக்குள் அழைப்பாயா?
உன் புன்னகை தீண்டல் போதுமடி!!
என் ஜென்மங்கள் ஏழும் சொர்க்கமடி!!