Friday, 28 February 2014

நிழலும் கூட வண்ணம் சுமக்கும்


என் கன்னத் தசைகள் வலி சொல்லுதே,
சிரிப்பை சிந்தி அயர்ந்ததினால்..
என் இதழின் ஓரம் விரிகின்றதே,
ஒவ்வொரு வார்த்தையின் முடிவினிலே ..
என் கைபேசியின் சிணுங்கல் சத்தம்,
விடியல் விதையை விதைக்கின்றதே...
என் தாய்மொழி கூட தடுமாறுதே,
நாவினை விட்டு வெளியேற...
என் சுவாச காற்றும் அதிசயமாய்,
ஒற்றை திசையில் நகர்கின்றதே...
என் காலைகள் இங்கு வருவதெல்லாம்,
காலங்களில் அவனை சேர்த்திடவே..
என் இரவுகள் இங்கு கடப்பதெல்லாம்,
கனவுகளில் நினைவை சுமந்திடவே...
என் நிழலும் கூட வண்ணம்  சுமக்கும்,
துணையாய் ஒருவன்,
இனி தினமும் என்னுடன்!!!

Saturday, 15 February 2014

வாடை காற்றின் வாச அம்பு !!!


அவள்  நெஞ்சோடு
சிறகு ஒன்று
சேர்ந்திருந்தது ..
அது இன்றோடு
மெல்ல விரிந்து
பறக்க துடித்தது..
காற்றோடு பேசி
காதலும் பூசி
மேகம் கடந்தது...
வாடை காற்றிலே
வந்த அம்பிலே
மோதி நின்றது...
ஒரு தேவதை மகன்
தேடலின் பதில்
அங்கு உதித்தது...
தேடி வந்தவன்
தூக்கி செல்கின்றான்
அம்போடு
அவள் அன்பு நெஞ்சையும்!!!