துள்ளி கொண்டு மண்ணைச் சேர்ந்தாள்
தந்தை கையின் ஒளியின் வழியே
மெல்ல மெல்ல தவழக் கற்றாள்
கையை பிடித்து கதைகள் சொல்ல
மழலை மொழியில் மயக்கம் செய்தாள்
நெஞ்சம் எங்கும் வஞ்சம் இன்றி
கொஞ்சி கொஞ்சி பெண்மை சொல்வாள்
நிறங்கள் அனைத்தையும் தாவணி நுனியில்
பாஷைகள் நூறு பேச வைப்பாள்
என்றும் போல் ஏனோ
அந்த நாளும் இல்லை
வழக்கம் போல நிலவும் உனக்காக
காத்து காத்து களைத்து போனது
காமுகன் கையில்
ஒரு தேவதை கதை
முடியும் விதியை
கனவும் கூட சொல்லவில்லை
நரகன் நகத்தின்
நாச வலையால்
நரகம் சென்றிடவும் துணிந்து பார்த்தாள்
அவதாரம் பத்தும்
அபத்தம் ஆகின ஐந்து நொடியில்
சக்தியெல்லாம் சடலமாய்
மண்டியிட்டது அவள் மடியின் அருகில்
பெண்மை சொன்ன
மண்ணின் ஈரம்
அவள் உதிர வாசம்
சுமந்து உறைந்தது
அவள் கனவுகள் போனது
அவள் இமையோடு
அவள் நினைவுகள் சென்றிடும்
இரண்டு ஆண்டோடு
என்றேனும் மாறிடுமா
எங்கோ ஒரு தேவதை
இன்றும் சிந்தும்
அந்த
இரத்த துளிகளும்
கண்ணீர் வலிகளும்
அவல சத்தமும்????