Wednesday, 20 March 2013

என் மனமும் உன் நிழலும்!!!

நினைவுகளாய் சேர்த்து  வைத்த
 நொடிகள் ஒவ்வொன்றும் ,
வலிகளாய் நிதம் மாறி
  நெஞ்சை நொடிக்கின்றது ..
கை  கோர்த்த தருணம்
   கசந்து  நிற்கின்றது ...
சிந்திய சிரிப்புகள் எல்லாம்
 சிதைந்து கிடக்கின்றது ..
தீட்டிய வர்ணங்கள் அனைத்தும்
வெறுமையாய் மாறுகின்றது ...
வார்த்தைகளாய் பதிவு செய்தாலும்
 வேதனைகள் குறைவதில்லை ...
உந்தன் நிழல் நிஜமாகி
 கைகள் கோர்த்து ,
உன் தோளில் சாய்ந்திட
வாய்ப்புகளும் ஏதும்  இல்லை ... !!

2 comments:

  1. thank u so much u posted in correct time and u expressed my present feeling :) :'( missing my frnd

    ReplyDelete

Thank you buddy for your feedback...!!!