Thursday, 19 December 2013

என்னை போல் தானே நீயும்!!!


என்னை போலவே,
எண்ணம் சுமந்து ,
மண்ணில் அவளும், 
பிறந்திருப்பாள் !!

கயவன் ஒருவன், 
கலைத்த கனவினில், 
கலைந்து கிடந்தாள், 
சாலையோரம்!! 

கடந்து சென்றது, 
கட கடவென பேருந்துகள் ,
மட மடவென மனிதர்கள் ,
வேகம் குறையாமல் !!

தீண்டிய பார்வைகள் ,
திட்டி தீர்த்தது கொஞ்சம், 
பாவம் என்றது மிச்சம் ,
பாசம் தாராமல் !!

மூடன் ஒருவன் ,
மீண்டும் தீண்ட ,
அஞ்சி நடுங்கிய கண்கள் ,
இன்றும் கண்ணில் !!

இருபது ரூபாயை ,
இறுக்க கையில் திணித்து ,
காப்பாற்று என்ற கண்கள் ,
இன்றும் நெஞ்சில் !!

போர்வை போர்த்தி,
பத்திரம் செய்து ,
வழியனுப்பிய பின்னும் ,
இன்றும் மனதில் நீ !!

என்னை போலவே ,
எண்ணம் சுமந்து ,
கனவு கோட்டை ,
நீயும் செய்து இருப்பாயே  பெண்ணே !!!

Wednesday, 11 December 2013

என்னவன் பாரதி!!



தாலாட்டு அறிந்தேன்
உன் கண்ணம்மாவை
என் அம்மா சொன்னதால்!!

அச்சம்  தவிர்த்தேன்
உச்சி தொட்டு
என் தந்தை உன்னை சொன்னதால்!!

தேசியம் அறிந்தேன்
உன் "எந்தையும் தாயும்"
என் சிந்தையில் நின்றதால்!!

கனவுகள் சுமந்தேன்
"வானகம் இங்கு தென்பட"
எண்ணம் நீ தந்ததால்!!

கர்வம் சுமந்தேன்
உன் "புதுமை பெண் "
எனக்கு முன்மாதிரி ஆனதால்!!


கவிதை சேர்த்தேன்
உன் வார்த்தை கைகள்
என் விரல் பிடித்ததால்!!

தலையணை  பக்கம்
உன் பக்கங்கள் சொல்லும்
சொற்கள் எனக்கு சுகமாகும்!!

வேடிக்கை மனிதரின்
வாடிக்கை உலகில்
தேடி எனக்கு மாயம் செய்தாய்!!

எனக்குள் நிறைந்த
என் ஆத்ம நண்பன் ஒருவன் !!
என்னவன் பாரதி!!