நிமிடங்கள் ஒவ்வொன்றும்
புதிதாய் பூக்கின்றது ...
அவன் சிந்தும் புன்னகையில்
பூமியும் பிடிக்கின்றது....
என் பார்வை அவனைத் தீண்ட
ஆயிரம் கனவுகள் கொள்கின்றேன் ..
அடி தூரத்தில் அவன் வந்தால்
சிலிர்த்து விலகி செல்கின்றேன் ...
ஒரு வார்த்தை பேசிடவே
நூறு ஒத்திகை நடத்தினேன்...
ஒரு வார்த்தையும் அவன் செவியை
தீண்டவில்லை ஒரு பொழுதும்...
அவன் காலணி சத்தம் போதும்
அவன் வருகையை கணிப்பதற்கு...
இருந்தும் அவன் வரும் பாதையில்
செல்ல தயங்கி நிற்கின்றேன்...
அவன் விரல் அசைவின் அழகையும்
தவற விடாமல் ரசிக்கின்றேன்...
அவன் பார்வை என்னை தீண்டினால்
என் பார்வை விலக்கி செல்கின்றேன் ...
அவனுக்காக சேர்க்கும் அன்பை மறைப்பதும்
புது வித சுகங்களின் சுமை தான்...!!

.jpg)






