Sunday, 26 May 2013

சிட்டு குருவியின் இருப்பிடம் எங்கே??


காலை தென்றலை மறந்து,
 காய்ந்த ரொட்டியை மென்று,
அரைகுறை தூக்கத்தில் நடந்து,
 அவசரமாய் காகித பேயை பிடிக்க ஓடுவது,
நாளை வரும் நம் சந்ததிக்கு,
 நுண்ணிய பதில்களை தருவதற்கே..!!!
#சிட்டு குருவியின் இருப்பிடம் எங்கே??
 என் அப்பாவின் லேப்டாப்பிலே!!!


Sunday, 12 May 2013

அ...ம்....மா....!!!


காலை தூக்கத்தின் ஐந்து நிமிட நீட்டிப்பிற்கு
சபித்து கொண்டே சம்மதம் சொல்வாள்..
எண்ணெய் இல்லாமல் தலையை வாரினால்
திட்டி கொண்டே அழகாய் திருத்தம் செய்வாள்..
என் கண்ணின்  தேடல் அறிந்தே
என் பாதையில் பயணம்  செய்வாள் ..
அவள்  மடி மீது தலை சாய்க்கும் சுகத்திற்கு
உவமைகள் ஏதும் இந்த உலகத்தில் இல்லை...
என் கண்ணின் ஈரம் அவள்  நெஞ்சில் செய்யும் மாயத்திற்கு
எந்த அறிவியலும் பதில் சொன்னது இல்லை ..
அவள் உதிரம் உருக்கி எனக்கு உயிர்நாடி செய்தாள்..
அவள் இதயம் முழுதும் என்னையே பதித்தாள் ..
மறுஜென்மம் என்பது உண்மை என்றால்
அவள் கருப்பையில் மீண்டும் வாசம் செய்யவேண்டும் !!!